தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி |

அடங்கமறு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராசி கண்ணா. தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் மாறிமாறி நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ராசி கண்ணாவும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார்.
ராஷி கண்ணா, நேற்று தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் இருப்பேன் என்றும் கூறினார். ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "வணக்கம் நண்பர்களே, எனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். ஆனால் நான் உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். நன்றி!" என்று தெரிவித்துள்ளார் .
நடிகை ராஷி கண்ணா தென்னிந்திய திரைப்பட ரசிகர்களிடமிருந்து அவர் கூறிய கருத்துகளுக்காக ஆன்லைனில் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார். தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்ய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது .
இதற்கிடையில், அவர் அடுத்ததாக தமிழில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தில் நடிக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள 'யோதா' என்ற ஹிந்தி படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.