பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கன்னட நடிகர் என்கிற அடையாளம் இருந்தாலும் பான் இந்தியா நடிகராக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் கிச்சா சுதீப். சமீபத்தில் வெளியான இவரது விக்ராந்த் ரோனா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிச்சா சுதீப்புக்கு அவரே எதிர்பார்த்திராத மிகப்பெரிய கவுரவம் ஒன்று மிகப்பெரிய பரிசாக கர்நாடக அரசாங்கத்தின் மூலம் தேடி வந்துள்ளது.
ஆம்.. கர்நாடகாவில் பசுக்களை தத்தெடுத்து பராமரிக்கும் விதமாக புண்ணியகோட்டி தத்து யோஜனா என்ற கர்நாடக அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் சுதீப். கர்நாடகாவில் கோசாலைகளில் இருக்கும் பசுக்களை பராமரிக்க, ஒரு பசுவின் ஒரு வருட பராமரிப்பு செலவு தொகையான 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் தத்தெடுக்க செய்வதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுதீப்புக்கு இந்த கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.