மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கன்னட நடிகர் என்கிற அடையாளம் இருந்தாலும் பான் இந்தியா நடிகராக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் கிச்சா சுதீப். சமீபத்தில் வெளியான இவரது விக்ராந்த் ரோனா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிச்சா சுதீப்புக்கு அவரே எதிர்பார்த்திராத மிகப்பெரிய கவுரவம் ஒன்று மிகப்பெரிய பரிசாக கர்நாடக அரசாங்கத்தின் மூலம் தேடி வந்துள்ளது.
ஆம்.. கர்நாடகாவில் பசுக்களை தத்தெடுத்து பராமரிக்கும் விதமாக புண்ணியகோட்டி தத்து யோஜனா என்ற கர்நாடக அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் சுதீப். கர்நாடகாவில் கோசாலைகளில் இருக்கும் பசுக்களை பராமரிக்க, ஒரு பசுவின் ஒரு வருட பராமரிப்பு செலவு தொகையான 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் தத்தெடுக்க செய்வதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுதீப்புக்கு இந்த கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.