பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த பரபரப்பு வருமான வரித்துறை ரெய்டு. தமிழ் சினிமாவில் இன்று உருவாகும் பெரும்பாலான படங்களில் தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச் செழியனின் பணம் இருக்கும். அவரிடம் பணம் பெற்றே முன்னணி நடிகர்கள் கூட படங்கள் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் வருமானத்தை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் படி கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களின் வீடு அலுவலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
குறிப்பாக தயாரிப்பாளர் அன்புசெழியன், அவரது சகோதரர் அழகர், தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, பிரின்ஸ் பிக்சர் லக்ஷ்மன். ராஜ்கமல் பிலிம்ஸ் மகேந்திரன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல், விநியோகஸ்தர் அருள்பதி, பைனான்சியர் ஜஷ்வந்த்., ஜெமினி லேப் ரவி, பிரசாத் லேப் போன்றவர்கள் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. நான்கு நாட்களாக நீடித்த இந்த ரெய்டு முடிந்துள்ளது. இவர்களின் வீடு அலுவலகங்களில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற விபரம் இனிமேல் தான் தெரிய வரும்.