ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது இயக்கி வரும் பான்--இந்தியா படம் 'புராஜக்ட் கே'. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஹிந்தி, தெலுங்கில் தயாராகி வரும் இப்படம் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜுலை மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமானது. தொடர்ந்து சீரான இடைவெளியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டில்தான் முடிவடைய உள்ளது. அந்த வருடத்திலேயே இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து 2024ல் முடிக்க உள்ளார்களாம். சுமார் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.