துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மலையாள திரையுலகில் மம்முட்டியின் மகன் என்கிற அடையாளத்துடன் வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் துல்கர் சல்மான். அவரது முதல் படமே ஆக்சன் பின்னணியில் அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து தந்தையைப் போல ஆக்சன் நடிகராக மாறுவார் என எதிர்பார்த்தால், தான் நடித்த படங்களில் 75 சதவீதத்திற்கு மேல் காதல் கதைகளாகவே தொடர்ந்து நடித்து வருகிறார் துல்கர். இனிமேல் காதல் கதையே வேண்டாம் என அவர் நினைத்திருந்த நேரத்தில் தான் தற்போது அவர் நடிப்பில் வெளியாக உள்ள சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இந்த படத்தின் கதையை சொன்னாராம்.
சற்றே மாறுபட்ட கதைக்களத்தில் வித்தியாசமான காதல் கதையாக இந்த படம் இருந்ததால், வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு நடித்துள்ளார் துல்கர் சல்மான். வரும் ஆக-5ல் படம் ரிலீசாக உள்ளதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, இந்த தகவலை பகிர்ந்து கொண்ட துல்கர் சல்மான், சீதாராமம் படம் தான் நடிக்கும் கடைசி காதல் படமாக இருக்கும் என்றும் இனி மேல் கமர்சியல் அம்சங்கள் கொண்ட படங்களில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.