மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழிலும் இந்தியிலும் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிவிட்ட இயக்குனர் ஷங்கர் தற்போது முதல்முறையாக தெலுங்கு திரை உலகில் அடி எடுத்து வைத்து, இளம் முன்னணி நடிகரான ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியின் நகராட்சி அதிகாரியான அகுலா ஸ்ரீவாணி என்பவர் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு தடை விதித்ததுடன் பள்ளிக்கூடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாணவர்களின் படிப்பு பாழாகும் விதமாக படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல இப்படி பள்ளியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.