துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழிலும் இந்தியிலும் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிவிட்ட இயக்குனர் ஷங்கர் தற்போது முதல்முறையாக தெலுங்கு திரை உலகில் அடி எடுத்து வைத்து, இளம் முன்னணி நடிகரான ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியின் நகராட்சி அதிகாரியான அகுலா ஸ்ரீவாணி என்பவர் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு தடை விதித்ததுடன் பள்ளிக்கூடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாணவர்களின் படிப்பு பாழாகும் விதமாக படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல இப்படி பள்ளியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.