மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் சஞ்சிதா ஷெட்டி. சூது கவ்வும் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம், என்கிட்ட மோதாதே உள்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள பார்ட்டி படம் வெளிவர வேண்டியது இருக்கிறது.
சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்தாலும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எந்த ஊரில் படப்பிடிப்பு நடந்தாலும் அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு சென்று விடுவார். இதுதவிர படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ராமேஸ்வரம் வீட்டுக்கு சென்றார் சஞ்சிதா. அங்கு கலாமின் உறவினர்களை சந்தித்து பேசினார், அவர்கள் சஞ்சிதாவுக்கு அக்னி சிறகுகள் புத்தகத்தை வழங்கினார்கள். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து சஞ்சிதா கூறியிருப்பதாவது: அப்துல் கலாம் அய்யாவின் மிகப்பெரிய ரசிகை நான். அவரது அறிவும், அமைதியும் எனக்கு பிடிக்கும். அவர் உயிரோடு இருக்கும்போது சந்திக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. திடீரென அவர் பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. சென்று வந்தேன். அந்த வீட்டில் இருந்த தருணங்கள் என் வாழ்க்கையில் முக்கியமானது என்கிறார் சஞ்சிதா.