துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். வாரிசு நடிகர்கள், நடிகைகளுக்கு மட்டுமே தன் படங்களில் அதிகமாக வாய்ப்புகளைக் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. பிரபல பாலிவுட் ஹீரோவான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட போது கரண் மீதான 'நெப்போட்டிசம்' விமர்சனங்கள் அதிகம் இருந்தது.
சமீபத்தில் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியான 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளித்த சமந்தா “தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஹீரோயின் சமந்தாவுடன் இணைந்து நடித்த போது,“ என்று பேசினார். அப்போது இடை மறித்த கரண், நயன்தாரா தன்னுடைய லிஸ்ட்டில் இல்லை என்றார். அதை சமாளித்து சமந்தா தொடர்ந்து பேசினார்.
நயன்தாரா பற்றி கரண் சொன்னது குறித்து நயன்தாரா ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். “ஆலியா பட் போன்ற வாரிசு நடிகைகள்தான் உங்களுக்குத் தெரியும், தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அவரைப் பற்றித் தெரிந்து கொண்டு பேசுங்கள் கரண், நயன்தாரா சுயமாக முன்னேறியவர், வாரிசு நடிகை அல்ல,” என்றும் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அளித்துள்ளனர்.
நயன்தாரா தற்போது ஷாரூக்கான் ஜோடியாக 'ஜவான்' ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.