கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து கடந்த மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ரஜினி, ஷாருக்கான், மலையாள நடிகர்கள் திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறைவானவர்கள் கலந்து கொண்டாலும் ரிச்சாக நடந்த இந்த திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்ப முன்னணி ஓடிடி நிறுவனம் 25 கோடி கொடுத்து உரிமம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களின் திருமண வீடியோவை ஓ.டி.டி. தளம் வெளியிட மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு தாலிகட்டும் படத்தை தவிர வேறு படமோ கிளிப்பிங்ஸோ மீடியாக்களுக்கு தரக்கூடாது என்று ஓடிடி நிறுவனம் தடை விதித்திருந்ததாம். ஆனால் அதை மீறி திருமணமான 30வது நாளை கொண்டாடும் வகையில் விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சில படங்களை வெளியிட்டார். இது ஓடிடி தளத்திற்கு பிடிக்கவில்லையாம். இதனால் நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதில் இருந்து ஓடிடி நிறுவனம் பின்வாங்குவதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.