நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
தமிழை விட தெலுங்கில் நிறைய புதுமுக நாயகிகள், வளரும் நாயகிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. கடந்த இரண்டு வருடங்களாக கொரானோ தாக்கத்தால் பல புதிய படங்கள் ஆரம்பிக்காத நிலையில் அறிமுக நடிகைகள் வருவதும் குறைந்துள்ளது.
தெலுங்கில், “டாக்சிவாலா, திம்மருசு, எஸ்ஆர் கல்யாண மண்டபம், கமனம்” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரியங்கா ஜவல்கர். பேஷன் டிசைனிங் படித்து முடித்து பின்னர் அமெரிக்கா சென்று வேலை பார்த்து வந்தவர். சமூக வலைத்தளத்தில் அவருடைய புகைப்படங்களைப் பார்த்து நடிக்க அழைத்து தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டார்.
சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் சாட் செய்த பிரியங்காவிடம் ஒரு ரசிகர், “கோலிவுட்டில் உங்களுக்கு யார் மீது ஆசை” எனக் கேட்டதற்கு, “எப்போதுமே தனுஷ், இப்போது சிம்புவையும் சில காரணங்களுக்காகக் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இருவருமே அழகானவர்கள்,” என்று பதிலளித்திருக்கிறார்.
தங்களைப் பிடிக்கும் எனச் சொன்ன பிரியங்காவிற்கு தனுஷ், சிம்பு இருவரில் யார் நடிக்க வாய்ப்பு கொடுக்கப் போகிறார்கள்?.