நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
பிரபல கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்(80) ராஜ்யசபாக எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள கொவ்வூர் என்ற ஊரில் பிறந்தவர் இவர். ஜானகி ராமுடு என்ற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமான இவர் சத்ரபதி, மகதீரா, பாகுபலி 1,2, ஆர்ஆர்ஆர், பஜ்ரங்கி பைஜான், மெர்சல், மணிகர்னிகா, தலைவி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதி உள்ளார். ஓரிரு படங்களை இயக்கியும் உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், மகனின் வெற்றி படங்களுக்கு கதையில் முக்கிய பங்காற்றி உள்ளார்.
இந்நிலையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ராஜ்யசபாவிற்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன் அடிப்படையில் விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும், அரசியல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.