தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
பிரபல கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்(80) ராஜ்யசபாக எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள கொவ்வூர் என்ற ஊரில் பிறந்தவர் இவர். ஜானகி ராமுடு என்ற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமான இவர் சத்ரபதி, மகதீரா, பாகுபலி 1,2, ஆர்ஆர்ஆர், பஜ்ரங்கி பைஜான், மெர்சல், மணிகர்னிகா, தலைவி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதி உள்ளார். ஓரிரு படங்களை இயக்கியும் உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், மகனின் வெற்றி படங்களுக்கு கதையில் முக்கிய பங்காற்றி உள்ளார்.
இந்நிலையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ராஜ்யசபாவிற்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன் அடிப்படையில் விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும், அரசியல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.