ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கடந்த மாதம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து ஹனிமூன் சென்று திரும்பினர். தற்போது ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதேபோல் அஜித் நடிக்கும் 62வது படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை விக்னேஷ்சிவனும் தொடங்கி இருக்கிறார். விக்னேஷ் சிவன் தனது காதலராக இருந்தபோது அவருக்காக பிரம்மாண்ட வீடு ஒன்றை திருமண பரிசாக வழங்க இருந்தார் நயன்தாரா. இந்த வீட்டில் தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் ஆகியும் இடம் பெறப்போகிறது. இவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் அமைப்பதற்காக மும்பையில் ஷாருக்கான் போன்ற பிரபலங்களின் வீடுகளில் பணிபுரிந்த நிறுவனத்தை சென்னைக்கு அழைத்திருக்கிறார் நயன்தாரா. அந்த வகையில், இந்த புதிய வீட்டின் உள்புற வேலைக்களுக்காக மட்டுமே பல கோடி ரூபாய் வரை அவர் பட்ஜெட் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வேலைகள் முடிந்ததும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் அந்த புதிய வீட்டில் குடியேறப்போகிறார்கள்.