Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா

03 ஜூலை, 2022 - 04:29 IST
எழுத்தின் அளவு:
Ramba-enjoyed-watching-the-movie-'Yaanai'-in-the-theatre

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்பா. இவர் 2010ல் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் சென்னையில் குடி இருந்த ரம்பா, திருமணத்துக்கு பிறகு கனடா நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை வந்திருக்கிறார் ரம்பா. அப்படி வந்தவர், நடிகர் அருண் விஜய்யின் தங்கையான நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து யானை படத்தை சென்னையில் உள்ள ஊர் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளார்.

அப்போது தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். மேலும், தியேட்டரை விட்டு வெளியே வந்த நடிகை ரம்பா மீடியாக்களிடம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாக தெரிவித்தார். மேலும், யானை படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்சன் மற்றும் காமெடி காட்சிகளை குழந்தைகள் ரசித்து பார்க்கிறார்கள். ஹரி சிறப்பாக இயக்கி உள்ள இந்த படத்தில் அருண் விஜய் சூப்பராக நடித்துள்ளார் என்றும் தெரிவித்தார் ரம்பா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம்லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை ... சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)