டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர். இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா 2022 போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.
தமிழில் 'அன்பறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். மூன்றாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் ஷிவானி, மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.
விலகலுக்கான காரணம் குறித்து ஷிவானி, “எனது மருத்துவப் படிப்பின் எழுத்துத் தேர்வுகள் மற்றும் மலேரியாவால் நான் பாதிக்கப்பட்ட காரணத்தால் பெரும்பாலான அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை என்னால் சரிவர செய்ய முடியவில்லை. மீண்டும் நலம் பெற்றுத் திரும்பி வருவேன். எனக்கேற்றபடி எதுவும் நடக்கவில்லை. எனது பிராக்டிக்கல் தேர்வுகள் திடீரென ஜுலை 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது,” என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான அழகுப் போட்டியில் கலந்து கொள்வேன் என்றும் ஷிவானி மேலும் தெரிவித்துள்ளார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் ஷிவானி தமிழ்நாடு சார்பாகத்தான் இந்த அழகுப் போட்டியில் கலந்து கொள்ள இருந்தார். தற்போது அவர் போகாத காரணத்தால் இந்த வருடம் தமிழ்நாடு சார்பில் யாரும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.