மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் |
டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர். இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா 2022 போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.
தமிழில் 'அன்பறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். மூன்றாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் ஷிவானி, மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.
விலகலுக்கான காரணம் குறித்து ஷிவானி, “எனது மருத்துவப் படிப்பின் எழுத்துத் தேர்வுகள் மற்றும் மலேரியாவால் நான் பாதிக்கப்பட்ட காரணத்தால் பெரும்பாலான அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை என்னால் சரிவர செய்ய முடியவில்லை. மீண்டும் நலம் பெற்றுத் திரும்பி வருவேன். எனக்கேற்றபடி எதுவும் நடக்கவில்லை. எனது பிராக்டிக்கல் தேர்வுகள் திடீரென ஜுலை 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது,” என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான அழகுப் போட்டியில் கலந்து கொள்வேன் என்றும் ஷிவானி மேலும் தெரிவித்துள்ளார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் ஷிவானி தமிழ்நாடு சார்பாகத்தான் இந்த அழகுப் போட்டியில் கலந்து கொள்ள இருந்தார். தற்போது அவர் போகாத காரணத்தால் இந்த வருடம் தமிழ்நாடு சார்பில் யாரும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.