மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய பிறகு சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார் சிவா. அந்த நேரம் பார்த்து ரஜினி அழைப்பு விடுத்ததால் அவரை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கத் தொடங்கினார். இதன் காரணமாக சூர்யா - சிறுத்தை சிவா இணைய இருந்த படம் தள்ளிப்போனது. இந்த நிலையில் அண்ணாத்தக்கு பிறகு மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்க போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது பாலா இயக்கும் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
அதன் பிறகு வெற்றிமாறன், ஞானவேல் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதால் சிவா படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக வேறு நடிகரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க சிவா கால்சீட் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த செய்தியை சிவா வட்டாரம் மறுத்துள்ளது.
அவர்கள் கூறுகையில், தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, வெற்றி மாறன் படத்தை முடித்ததும், சிவா இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அந்த படம் ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது என்கிறார்கள். அதனால் வெற்றிமாறனின் வாடிவாசலை முடித்ததும் சிவா, ஞானவேல் ஆகியோர் இயக்கும் படங்களில் சூர்யா நடிப்பார் என்று தெரியவந்துள்ளது.