பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சிவா இயக்கத்தில் ‛அண்ணாத்த' படத்தில் நடித்த ரஜினி அதையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் தனது 169 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். சமீபகாலமாக தான் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் இந்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி. அதன் காரணமாகவே பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அந்த படத்தில் வலுவான திரைக்கதையை அமைக்காததால், இப்படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு தனது ஆஸ்தான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நியமித்திருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், கே. எஸ் .ரவிக்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம் இறுதியிலிருந்து ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. அதோடு இந்த படத்தை மூன்று மாதங்களில் நடித்து முடிக்கவும் ரஜினி திட்டமிட்டிருக்கிறார். அதன் காரணமாக இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நடிகர் - நடிகைகளிடமும் மூன்று மாதத்திற்கு மொத்தமாக கால்சீட் வாங்கி உள்ளனர்.