அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் எப்பொழுதும் ஜாலியாக சுற்றுலா கிளம்பிவிடும் நடிகைகள் பட்டியலில் மாளவிகா மோகனன் முதல் ஆளாக இருக்கிறார். மாலத்தீவு மற்றும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த மாளவிகா, சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா வனவிலங்கு சரணாலயத்திற்கு தனது தோழிகள் இருவருடன் விசிட் அடித்து சில நாட்களாக காட்டிற்குள் வனவிலங்குகளை நேரில் பார்ப்பதற்காக தினசரி சபாரி மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த பயணத்தின் கடைசி நாளாக இவர்கள் காட்டில் பயணம் மேற்கொண்டபோது நீண்ட நேரமாக எந்த ஒரு மிருகமும் தட்டுப்படவில்லை. இதனால் சற்றே அப்செட் ஆன மாளவிகாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் விதமாக அவர்கள் சென்ற பாதையில் சிறுத்தை ஒன்று இவர்கள் வரவுக்கு காத்திருந்தது போலவே அமர்ந்திருந்ததாம். உடனே தனது கேமராவை எடுத்து சிறுத்தையை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார் மாளவிகா.
அந்த சிறுத்தை இவர்களை நோக்கி வந்ததும் மாளவிகாவுக்கு சில நொடிகள் மூச்சே ஸ்தம்பித்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். கிட்டத்த இப்படியே பத்து நிமிடங்கள் கழிந்தபிறகு சிறுத்தை இவர்களை பெரிதாக கண்டுகொள்ளாமல் தான் வந்த பாதை வழியே திரும்பி சென்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனராம் மாளவிகாவும் அவரது தோழிகளும்.