அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் எப்பொழுதும் ஜாலியாக சுற்றுலா கிளம்பிவிடும் நடிகைகள் பட்டியலில் மாளவிகா மோகனன் முதல் ஆளாக இருக்கிறார். மாலத்தீவு மற்றும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த மாளவிகா, சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா வனவிலங்கு சரணாலயத்திற்கு தனது தோழிகள் இருவருடன் விசிட் அடித்து சில நாட்களாக காட்டிற்குள் வனவிலங்குகளை நேரில் பார்ப்பதற்காக தினசரி சபாரி மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த பயணத்தின் கடைசி நாளாக இவர்கள் காட்டில் பயணம் மேற்கொண்டபோது நீண்ட நேரமாக எந்த ஒரு மிருகமும் தட்டுப்படவில்லை. இதனால் சற்றே அப்செட் ஆன மாளவிகாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் விதமாக அவர்கள் சென்ற பாதையில் சிறுத்தை ஒன்று இவர்கள் வரவுக்கு காத்திருந்தது போலவே அமர்ந்திருந்ததாம். உடனே தனது கேமராவை எடுத்து சிறுத்தையை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார் மாளவிகா.
அந்த சிறுத்தை இவர்களை நோக்கி வந்ததும் மாளவிகாவுக்கு சில நொடிகள் மூச்சே ஸ்தம்பித்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். கிட்டத்த இப்படியே பத்து நிமிடங்கள் கழிந்தபிறகு சிறுத்தை இவர்களை பெரிதாக கண்டுகொள்ளாமல் தான் வந்த பாதை வழியே திரும்பி சென்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனராம் மாளவிகாவும் அவரது தோழிகளும்.