மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்ற தனது காதலருடன் ‛லிவிங் டு கெதர்' வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் சாந்தனுவுடன் லிவிங் டு கெதர் உறவுமுறையில் வாழ்ந்து வரும் நீங்கள் அவரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அதிர்ச்சி பதில் ஒன்று கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அதில், சாந்தனு மீது நிறைய நம்பிக்கை உள்ளது. அவர் எனது வாழ்க்கையில் வந்த பிறகு ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
முக்கியமாக எங்கள் இருவருக்கிடையே நிறைய விஷயங்கள் ஒத்துப்போகிறது. அதேசமயம் திருமணம் என்று சொன்னாலே எனக்கு பயமாக உள்ளது. அதனால்தான் அது குறித்து இன்னமும் நான் யோசிக்கவில்லை. மேலும் எனது பெற்றோரின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து விட்டதால் நான் அப்படி யோசிக்கவில்லை. திருமணம் என்கிற வாழ்க்கையில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. என்றாலும் ஏதோ ஒரு பயம் மட்டும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் திருமணம் குறித்து நிறைய யோசித்து வருகிறேன் என்று கூறி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.