புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கடின முயற்சியால் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு அடுத்தப்படியாக சிவகார்த்திகேயன் படம் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப ஆடியன்ஸ் அதிகம். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தன. டான் படத்தை ரஜினி பார்த்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினியை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசி உள்ளார். இதுதொடர்பான ஒரு போட்டோவை பகிர்ந்து சிவகார்த்திகேயன் கூறியதாவது : ‛‛இந்திய சினிமாவின் ‛டான்' சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். 60 நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களின் பொன்னான நேரத்திற்கும், டான் படத்திற்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்திற்கும் நன்றி தலைவா'' என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.