பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கடின முயற்சியால் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு அடுத்தப்படியாக சிவகார்த்திகேயன் படம் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப ஆடியன்ஸ் அதிகம். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தன. டான் படத்தை ரஜினி பார்த்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினியை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசி உள்ளார். இதுதொடர்பான ஒரு போட்டோவை பகிர்ந்து சிவகார்த்திகேயன் கூறியதாவது : ‛‛இந்திய சினிமாவின் ‛டான்' சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். 60 நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களின் பொன்னான நேரத்திற்கும், டான் படத்திற்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்திற்கும் நன்றி தலைவா'' என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.