துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
75வது கேன்ஸ் பட விழா கடந்த மே 17ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் உலகமெங்கிலும் இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்களும் இதில் திரையிடப்பட்டன. பார்த்திபன் இயக்கிய சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல், மாதவனின் ராக்கெட்ரி உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.
நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அனைத்து விருதுகளையும் மேற்கத்திய நாட்டு படங்களே வழக்கம்போல அள்ளிச் சென்றது. முதன் முறையாக ஒரு பாகிஸ்தானி படம் விருது வென்றது. இந்தியாவை பொருத்தவரை ஷானக் சென் இயக்கிய ஆல் தட் ப்ரீத்தஸ் என்ற ஆவணப்படம் விருது பெற்றது. அதற்கு கோல்டன் ஐ விருது வழங்கப்பட்டது.
தலைநகர் டில்லி மாசடைந்து வருவது குறித்தும், அந்த மாசுக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஒரு பருந்தையும், அந்த பருந்தை காப்பாற்ற போராடும் இரு சிறுவர்களையும் பற்றியும் இந்த படம் உருவாகி உள்ளது. இந்திய அளவில் ஏற்கெனவே பாராட்டையும், விருதுகளையும் பெற்ற படம், தற்போது கேன்ஸ் விருதையும் வென்றிருக்கிறது.