மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வாழ்க்கை சினிமா மினிமம் கியாரண்டி படங்களாக உருவெடுத்திருக்கிறது. டோனி, சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை சினிமா ஆகியிருக்கிறது. இந்த வரிசையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது.
இவரது படத்தை இயக்கப்போவது ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா என்ற தகவல் பரவி உள்ளது. தற்போது ஐஸ்வர்யா பிசிசிஐ தலைவராக இருந்து சவுரவ் கங்குலி நடத்தும் ஐபிஎல் போட்டியை காண தனது மகன்களுடன் கோல்கட்டா சென்றுள்ளார். அங்கு கங்குலி நடத்திய விருந்திலும் கலந்து கொண்டுள்ளார். இதை வைத்துக் கொண்டு இந்த தகவல்கள் பரவி இருக்கிறது. ஆனால் இதனை ஐஸ்வர்யா இதுவரை மறுக்கவில்லை.
தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களின் மூலம் தன்னை திறமையான இயக்குனர் என்று நிரூபித்தவர் ஐஸ்வர்யா. தற்போது அவர் ஓ சாதிசால் என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.