பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இன்றைய ஓடிடி யுகத்தில் தியேட்டர்களில் வெளியாகும் ஒரு படம் நான்கு வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதனால், தியேட்டர்களில் வெளியாகும் படங்களைக் கூட கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்து ஓடிடியில் பார்த்துக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு டப்பிங் படம் தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்களுக்கும் மேலாக இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியம்தான். அந்தப் பெருமையை 'கேஜிஎப் 2' படம் பெற்றுள்ளது. படத்தில் கேஜிஎப்பின் 'டான்' ஆக ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யஷ் தமிழ் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுவிட்டார்.
அப்படத்துடன் வெளிவந்த 'பீஸ்ட்' படம் கூட கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தியேட்டர்களில் மட்டும் ஓரிரு காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு வந்த பல நேரடி தமிழ்ப் படங்கள் ஓரிரு நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டுவிட்டன. கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படம் கூட வெளிவந்தது. எத்தனை 'டான்'கள் வந்தாலும் 'கேஜிஎப் டான் ராக்கி பாய்' இன்னமும் அசைக்க முடியாத டானாகவே இருக்கிறார். தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
கோடை விடுமுறை ஆரம்பமாகியுள்ளதாலும், இன்னமும் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பதாலும் இந்த வாரமும் 'கேஜிஎப் 2' தாக்குப்பிடிக்கும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.