ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நடிப்பில் சுந்தர் பாலு தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குனர் தியாகராஜன், இயக்குனர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய ஹீரோயின். அவருடன் ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா ஆகியார் நடித்துள்ளர். நேற்று நடந்த விழாவிற்கு சுபிக்ஷா மட்டுமே வந்திருந்தார். மற்ற 3 ஹீரோயின்களும் வரவில்லை. இத்தனைக்கும் ஆஷ்னா ஜவேரியும், ஐஸ்வர்யா தத்தாவும் பிசியான நடிகைகள் இல்லை.
இதுகுறித்து படத் தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது "ஒவ்வொரு நடிகையும் வெவ்வேறு காரணங்களை சொல்லி விழாவுக்கு வரவில்லை. வரலட்சுமி சரத்குமார் தான் ஐதராபாத்தில் குடியேறி விட்டதாகவும், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதாலும் வர இயலாது என்று தெரிவித்து விட்டதாக" கூறினார்கள்.
விழாவில் நடிகை சுபிக்ஷா பேசியதாவது: கன்னித்தீவு படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் ஆக்ஷன், பாடல் பாடுவது என்று ஒரு கதாநாயகன் செய்யும் அனைத்தையும் கதாநாயகிகளான நாங்கள் செய்திருக்கிறோம். திரைப்படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்குனர் சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார், என்றார்.