இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை ஐபிஎல் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு சொந்தமான நிறுவனம் தோனி என்டர்டெயின்மெட். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படம் ஒன்று தமிழில் தயாராக உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது.
அதை தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சஞ்சய் என்பவருடன் தோனி என்டர்டெயின்ட் நிறுவனம் எந்தவிதமான வேலையையும் செய்யவில்லை. இப்படியான மோசடி தகவல்கள் மீது எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம். எனினும், எங்களது நிறுவனம் பலதரப்பட்ட திட்டங்களுக்கான வேலையில் ஈடுபட்டு வருகிறது, அவற்றை விரைவில் உங்களுடன் பகிர்வோம்,” என்று அறிவித்துள்ளது.
சஞ்சய் என்பவர் ரஜினிகாந்த்திடம் பணி புரிந்தவர் என்றும், அவர் தான் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் முக்கிய பணியில் இணைந்துள்ளார் என்றும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது. அதை தற்போது தோனி நிறுவனமே மறுத்துள்ளது.
அதேசமயம் தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிப்பது பற்றி எந்த அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவில்லை. இதனால் அவர் நடிக்கிறாரா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.