பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை ஐபிஎல் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு சொந்தமான நிறுவனம் தோனி என்டர்டெயின்மெட். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படம் ஒன்று தமிழில் தயாராக உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது.
அதை தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சஞ்சய் என்பவருடன் தோனி என்டர்டெயின்ட் நிறுவனம் எந்தவிதமான வேலையையும் செய்யவில்லை. இப்படியான மோசடி தகவல்கள் மீது எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம். எனினும், எங்களது நிறுவனம் பலதரப்பட்ட திட்டங்களுக்கான வேலையில் ஈடுபட்டு வருகிறது, அவற்றை விரைவில் உங்களுடன் பகிர்வோம்,” என்று அறிவித்துள்ளது.
சஞ்சய் என்பவர் ரஜினிகாந்த்திடம் பணி புரிந்தவர் என்றும், அவர் தான் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் முக்கிய பணியில் இணைந்துள்ளார் என்றும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது. அதை தற்போது தோனி நிறுவனமே மறுத்துள்ளது.
அதேசமயம் தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிப்பது பற்றி எந்த அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவில்லை. இதனால் அவர் நடிக்கிறாரா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.