திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிரபல மலையாள நடிகர் ஜெயராம். அங்கு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயராம் தமிழில் பஞ்சதந்திரம், தெனாலி, கோகுலம், துப்பாக்கி, உத்தம வில்லன், உள்பட பல படங்களில் நடித்துள்ளார் இவரது மனைவி பார்வதியும் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர். இந்த தம்பதிகளுக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் உள்ளனர்.
இதில் காளிதாஸ் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மாளவிகாவும் சினிமாவுக்கு வருகிறார். முறைப்படி நடனம், நடிப்பு கற்றுள்ள மாளவிகா தற்போது விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ," மாயம் செய்தாயோ பூவே" என்ற இசை ஆல்பத்தில் அசோக் செல்வன் உடன் நடித்தார். இந்த இசை ஆல்பத்தை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார், கிரிதரன் இசையமைத்துள்ளார்.
இந்த ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து சினிமாவில் அறிமுகமாக தயாராகிவிட்டார் மாளவிகா. இதற்காக கதைகள் கேட்கத் தொடங்கி இருக்கிறார். அனேகமாக அவர் மலையாளத்தில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.