'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
டி.ராஜேந்தரால் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மும்தாஜ். அதன்பிறகு குஷி, லூட்டி, சொன்னால்தான் காதலா, சாக்லேட், வேதம் உள்பட பல படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தற்போது படவாய்ப்புகள் இன்றி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அண்ணா நகரில் வசித்து வரும் அவரது வீட்டில் வேலை பார்த்த 2 வடமாநில சிறுமிகள் மும்தாஜ் பற்றி போலீசில் புகார் அளித்துள்ளனர். "நாங்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வருகிறோம். ஆனால் அவர் வீட்டில் வேலை செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. அவர் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மறுக்கிறார்" என்று தங்கள் புகாரில் கூறியுள்ளனர்.
சம்பவம் அறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், அப்பெண்னை மீட்டு, காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், பீஹாரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் என்பதும், இவரும் இவரது 17 வயது தங்கையும் கடந்த ஆறு ஆண்டுகளாக நடிகை மும்தாஜ் வீட்டில், வீட்டு வேலைக்கு சேர்க்கப்பட்டு பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மும்தாஜ் வீட்டில் இருந்த, 17 வயது சிறுமியை போலீசார் மீட்டு, ஷெனாய் நகரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அவர்கள் ஏன் மும்தாஜ் வீட்டில் வேலை செய்யப் பிடிக்கவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தொல்லைகள் கொடுக்கப்படுகிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், இந்த புகாரில் சிறுமி ஒருவர் இருப்பதால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை வேலைக்கு சேர்த்தது உறுதி செய்யப்பட்டதால், மும்தாஜ் மீது வழக்கு பதிவு செய்யயும் வாய்ப்புள்ளதாக, போலீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.