தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கன்னட உலகைத் தாண்டி தென்னிந்திய அளவில் பிரபலமான முகமாக மாறிவிட்டார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த நிலையில் தொடர்ந்து பல மீடியாக்களுக்கு அவர் பேட்டி அளித்து வருகிறார். ஏற்கனவே ஒரு பேட்டியில் அவர் மலையாள திரையுலகம் பற்றி கூறும்போது, மலையாளத்தில் தான் முதன்முதலாக பார்த்தது துல்கர் சல்மான் நடித்த சார்லி படம்தான் என கூறியிருந்தார்.
தற்போது இன்னொரு பேட்டியில் மலையாள திரையுலகம் பற்றி மீண்டும் அவர் சிலாகித்துக் கூறும்போது, “மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன். அதன்பிறகு அந்தப்படத்திற்கு நான் காதலியாகவே மாறி விட்டேன். அந்த அளவுக்கு என்னை அந்த படம் ஈர்த்து விட்டது. கேஜிஎப் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா வந்தபோது அந்த படத்தின் இயக்குனரான நடிகர் பிரித்விராஜை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அப்போது அவரிடம் உடனடியாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என நேரிலேயே கோரிக்கை வைத்தேன். அந்த அளவிற்கு அதன் இரண்டாம் பாகத்தை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.