‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ், தெலுங்கில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' இரண்டு பாகங்களிலும் நடித்து பெரிய வரவேற்பையும் பெற்றார். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'பாகமதி' படம் கூட வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த 'நிசப்தம்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்குப் பிறகு அவரது எந்தப் படங்களும் வெளியாகவில்லை.
நடிக்க வந்த வாய்ப்புகள் பலவற்றையும் அவர் வேண்டாமென சொன்னதாகத் தகவல். தற்போது ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். 40ஐத் தொட்டுவிட்டதால் இன்றைய இளம் நடிகர்களுடன் அனுஷ்காவால் ஜோடி சேர முடியாததும் ஒரு காரணம் என்கிறார்கள்.
அவ்வப்போது சமூக வலைத்தளம் பக்கம் எட்டிப் பார்க்கும் அனுஷ்கா, நேற்று அவருடைய அப்பாவின் பிறந்தநாளுக்காக அப்பாவுடன் விதவிதமாக எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “வருடங்கள் கடந்து போனாலும், நீங்கள் எவ்வளவு வயதை அடைவீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. நான் எப்போதும் உங்கள் குட்டிப் பொண்ணு தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா,” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.