கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
குவைத் : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பதட்டத்தை தூண்டுகிறது, அமைதியை குலைப்பதாக இருக்கிறது என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது. முஸ்லீம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்துள்ளதாக கண்டனம் எழுந்த நிலையில் இப்படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குவைத்தில் தமிழக மக்களுக்கு மத்தியில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ.,வும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : புனித ரமலான் அமைதியை தருகிறது. தமிழகத்தில் திரைப்படங்கள் வழியே சிலர் வெறுப்பை விதைக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தை கொச்சைப்படுத்த முனைகிறார்கள். ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த், கமல்ஹாஸன் போன்றவர்கள் இந்த தவறை செய்தார்கள். இப்போது பீஸ்ட் படம் விஜய் இந்த தவறை மூலம் செய்துள்ளார். ஏற்கனவே துப்பாக்கி படம் மூலம் அவர் இதுமாதிரியான பிரச்னைகளை சந்தித்தார்.
![]() |