இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படம் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் என்கிற சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி இந்தப்படத்தின் இரண்டு ஹீரோக்களின் கதாபாத்திரங்களையும் ராஜமவுலி உருவாக்கி இருந்தார். இதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார்.
இந்தப்படம் உருவாக ஆரம்பித்த காலத்தில் இருந்த கொமரம் பீமின் சொந்த ஊரான ஆசிபாபாத் பகுதி ரொம்பவே பிரபலமாக மாற துவங்கியது.. அங்கே கொமரம் பீம் மாவட்டம் என்கிற பெயரில் ஒரு புதிய ஏரியாவே உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல, முப்பது வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக அங்கே ஒரு திரையரங்கும் கட்டப்பட்டு அதில் தற்போது ஆர்ஆர்ஆர் படம் ஓடிகொண்டு இருக்கிறது.
இந்தநிலையில் தற்போது ஆசிபாபாத்துக்கு தனது மனிவியுடன் சென்ற ராஜமவுலி, அங்கே கொமரம் பீம் பகுதியில், அவரது பெயரிலேயே புதிதாக உருவாகி இருந்த கே.பீ திரையரங்கில் அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து ரசித்தார். பின்னர் அங்கிருந்த மக்களுடன் உரையாடிய ராஜமவுலி இங்கே வந்து உங்களுடன் அமர்ந்து இந்தப்படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.