கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அமராவதியை அடுத்த வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று(ஏப்., 11) காலை பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் உட்பட 24 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா நகரி தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ளார். நடிகையாக இருந்த இவர் இன்று அமைச்சராக உயர்வு பெற்றுள்ளார்.