பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அமராவதியை அடுத்த வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று(ஏப்., 11) காலை பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் உட்பட 24 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா நகரி தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ளார். நடிகையாக இருந்த இவர் இன்று அமைச்சராக உயர்வு பெற்றுள்ளார்.