ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன் நடித்த படம் எப் ஐ ஆர். கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியிருந்தார். இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் பணிகளை தொடங்கிவிட்ட அவர், தனது புதிய படத்தில் உதவி இயக்குனராக பணி புரிய விருப்பம் உள்ளவர் தன்னை அணுகலாம் என ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் அது குறித்து ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புவர்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியதோடு, நான் ஏற்கனவே அவரிடத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய விண்ணப்பித்தேன். ஆனால் என்னை அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று இந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அதையடுத்து மனு ஆனந்த் வெளியிட்ட பதிவில், உங்களது விண்ணப்பத்தை நான் பெறவில்லை. ஒருவேளை ஈமெயிலில் அது தவறி இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் மனு ஆனந்தின் புதிய படத்தில் மஞ்சிமா மோகன் உதவி இயக்குனராக வேலை செய்வார் என்று தெரிகிறது.