தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் | மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால் | மீண்டும் வெளியாகும் 'சேது' | அன்னை இல்ல வழக்கு தள்ளுபடி: சிவாஜி குடும்பம் நிம்மதி | வடிவேலு வழக்கில், சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் | சின்மயி கணவர் இயக்குனர், நடிகர் ராகுல் பிறந்தநாள் : ரஷ்மிகா வாழ்த்து | பிளாஷ்பேக்: நோயை ஜெயித்து, காதலில் தோற்ற விஜி | இளையராஜா பாணியை பின்பற்றும் கோவிந்த் வசந்தா | பிளாஷ்பேக்: காட்சிகளை விற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் | தனுஷ் மார்க்கெட் எகிறுகிறது : சம்பளம் 50 கோடி? |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பாராத வகையில் வனிதா விஜயகுமார் வெளியேறினார். இதற்கு காரணமாக, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதால், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார். ஏற்கனவே வனிதாவுக்கும் ரம்யாவுக்கு ஆகாது என்பதால் தான் வனிதா வெளியேறிவிட்டார் என செய்திகள் உலா வந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா முதல் வேலையாக இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வனிதா கூறுகையில், 'நான் பிக்பாஸ் அல்டிமேட்டை விட்டு வெளியேறியதை ரம்யா கிருஷ்ணனுடன் இணைக்கும் முட்டாள்களுக்கு' என்று சிரிப்பு ஸ்மைலியை போட்டுள்ளார். அதன் பின், 'நான் சுயமரியாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். நான் மன உளைச்சலுக்கு ஆளானதால் என்னால் குழப்பத்தை தாங்க முடியவில்லை. எனவே, துணிச்சலாக முடிவெடுத்து வெளியேறிவிட்டேன். என் சூழ்நிலையை புரிந்து கொண்டு என்னுடன் ஒத்துழைப்பு கொடுத்த எண்டெமால் மற்றும் டிஸ்னிக்கு என் மனப்பூர்வ நன்றி. வாழ்க்கை உங்களுக்கு வாய்ப்புகளை தருகிறது. உங்களுக்கு எது செட் ஆகுமோ அதை தேர்ந்தெடுங்கள். நான் எப்போதும் உறுதியான முடிவுகளை எடுப்பேன். அதை நினைத்து வருந்த மாட்டேன். ஏனெனில் எனக்கு என்ன வேண்டும், என் மதிப்பு என்ன என்பது எனக்கு தெரியும். எனவே, சில்லித்தனமான இந்த விளையாட்டுகளை குழந்தைகள் என்ஜாய் செய்யட்டும்' என அவர் பதிவிட்டுள்ளார்.