கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவும், இளம் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகவும், அவர்களுக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் என்றும் பல பாலிவுட் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.
இருவருமே ஹிந்திப் படங்களில் அறிமுகமாவதன் மூலம் பாலிவுட்டில் கால்பதித்துள்ளனர். விரைவில் அவர்களது நேரடி ஹிந்திப் படங்கள் வெளியாக உள்ளது. இதனால், பொறாமை அடைந்து யாராவது அவர்களைப் பற்றிய வதந்திகளைக் கிளப்பி விட்டுள்ளதாகவே தெலுங்குத் திரையுலகில் சொல்கிறார்கள். கடந்த சில நாட்களாக பல மீடியாக்களில் விஜய், ராஷ்மிகாவின் காதல் பற்றிய செய்தி வெளியானது. அவற்றை விஜய்யும் படித்திருப்பார் போலிருக்கிறது.
நேற்று சமூகவலைதளத்தில் 'வழக்கம் போல நான்சென்ஸ்' என்று ஒரு பதிவிட்டுள்ளார் விஜய். எதைப் பற்றி அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்று அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் படிப்பவர்களுக்குத் தெரியாதா ?.