நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் |
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் பிப்., 19ல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜ., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று(பிப்., 22)எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4வது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், வாலாஜாபேட்டையில் 3வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ், குமாரபாளையத்தில் போட்டியிட்ட வேல்முருகன், தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 14வது வார்டில் போட்டியிட்ட வேல்மயில், பொன்னேரி 16வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கொடிக்குளம் 5வது வார்டில் போட்டியிட்ட ராஜசேகரன் ஆகிய விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஓரிரு வார்டுகளில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.