பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் பிப்., 19ல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜ., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று(பிப்., 22)எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4வது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், வாலாஜாபேட்டையில் 3வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ், குமாரபாளையத்தில் போட்டியிட்ட வேல்முருகன், தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 14வது வார்டில் போட்டியிட்ட வேல்மயில், பொன்னேரி 16வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கொடிக்குளம் 5வது வார்டில் போட்டியிட்ட ராஜசேகரன் ஆகிய விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஓரிரு வார்டுகளில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.