பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நட்சத்திரம் நகர்கிறது படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார் பா.ரஞ்சித். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அதேபோல் விக்ரம் நடிப்பில் மகான் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் விரைவில் விக்ரமை இயக்கும் படத்தை தொடரப் போகிறார் பா.ரஞ்சித். ஆனால் இந்த படத்தின் கதையை கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கிய போதே விக்ரம் இடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் பா.ரஞ்சித். ஆனால் அதையடுத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ரஜினி படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றதால் விக்ரமை இயக்குவதை அப்போது தள்ளி வைத்திருக்கிறார். அதன் காரணமாக எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் ஏற்கனவே விக்ரம் இடத்தில் சொன்ன அந்த கதையை படமாக்க தயாராகி வருகிறார் பா. ரஞ்சித்.