சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
நட்சத்திரம் நகர்கிறது படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார் பா.ரஞ்சித். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அதேபோல் விக்ரம் நடிப்பில் மகான் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் விரைவில் விக்ரமை இயக்கும் படத்தை தொடரப் போகிறார் பா.ரஞ்சித். ஆனால் இந்த படத்தின் கதையை கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கிய போதே விக்ரம் இடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் பா.ரஞ்சித். ஆனால் அதையடுத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ரஜினி படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றதால் விக்ரமை இயக்குவதை அப்போது தள்ளி வைத்திருக்கிறார். அதன் காரணமாக எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் ஏற்கனவே விக்ரம் இடத்தில் சொன்ன அந்த கதையை படமாக்க தயாராகி வருகிறார் பா. ரஞ்சித்.