'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
நட்சத்திரம் நகர்கிறது படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார் பா.ரஞ்சித். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அதேபோல் விக்ரம் நடிப்பில் மகான் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் விரைவில் விக்ரமை இயக்கும் படத்தை தொடரப் போகிறார் பா.ரஞ்சித். ஆனால் இந்த படத்தின் கதையை கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கிய போதே விக்ரம் இடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் பா.ரஞ்சித். ஆனால் அதையடுத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ரஜினி படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றதால் விக்ரமை இயக்குவதை அப்போது தள்ளி வைத்திருக்கிறார். அதன் காரணமாக எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் ஏற்கனவே விக்ரம் இடத்தில் சொன்ன அந்த கதையை படமாக்க தயாராகி வருகிறார் பா. ரஞ்சித்.