300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான 'என்றென்றும் புன்னகை' தொடரில் ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமார் தொடரை விட்டு விலகினார். இதனையடுத்து சித்து கதாபாத்திரத்தில் சீரியல் நடிகர் விஷ்னுகாந்த் நடிக்கவுள்ளார். விஷ்னுகாந்த் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி', 'கோகுலத்தில் சீதை' ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்து வருகிறார். 'என்றென்றும் புன்னகை' தொடரின் மூலம் விஷ்னுகாந்த் சின்னத்திரையில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'என்றென்றும் புன்னகை' தொடர் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
முன்னதாக ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமாருக்கு அவருடைய காதலியும் சின்னத்திரை நடிகையுமான அபிநவ்யாவுடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து தீபக் என்றென்றும் புன்னகை தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டாகியிருப்பதால், ஜீ தமிழ் சேனலை விட்டு வெளியேறிவிட்டதாக சொல்கிறார்கள்.