ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் தற்போது வம்சி டைரக்ஷனில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகி யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் இந்த படம் விஜய்யின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, குடும்பம், பாசம், காதல், ஆக்ஷன் என எல்லாம் கலந்து உருவாக இருக்கிறது. குறிப்பாக காதலுக்கும் இந்த படம் முக்கியத்துவம் தந்து உருவாக இருக்கிறது.
அதனால் இந்தப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று அறிவிக்க இருக்கிறார்கள் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதைய லிஸ்ட்டில் ராஷ்மிகா, கியாரா அத்வானி, ராஷி கண்ணா ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.