லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
விக்ரம் பிரபு நடித்துள்ள ‛டாணாக்காரன்' படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து ‛டைகர்' என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் என்பவர் இயக்க, இயக்குனர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடத்தில் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(பிப்., 1) துவங்கியது. சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.
இயக்குனர் கார்த்தி படம் குறித்து கூறுகையில், ‛‛டைகர் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்த திரைப்படத்தில் இயக்குனர் முத்தையா பங்களிப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இது நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும், பரபர திரில்லராக, ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும் படமாக இருக்கும்'' என்றார்.