பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஹிந்தித் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பாகப் பேசப்படுபவர். இன்று கல்யாணம், விவகாரத்து ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து சில டுவீட்டுகளைப் பதிவு செய்துள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து செய்தியைத் தொடர்ந்துதான் அவர் இதைப் பதிவிட்டிருக்க வேண்டும்.
அதில், “திருமணங்களின் அபாயத்தை, ஸ்டார்களின் விவகாரத்துதான் டிரென்ட் செட்டராக அமைந்து இளைஞர்களை எச்சரிக்கிறது. கல்யாணம்தான் காதலை சீக்கிரத்தில் கொன்றுவிடுகிறது. திருமணம் என்ற ஜெயிலுக்குள் செல்வதற்கு முன்பு, காதல் எது வரை தொடர்ந்து இருக்கிறதோ அதுவரையில் மகிழ்ச்சியின் ரகசியமாக அது இருக்கிறது.
ஒரு திருமணத்தில் காதல் என்ற கொண்டாட்டம் 3 முதல் 5 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. புத்திசாலிகள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணம் என்பது இருவரின் அபாயமான தகுதிகளை வைத்து அமைதியாக நடைபெற வேண்டும். ஆனால், சுதந்திரமாக விலகுவதால், விவாகரத்து தான் சங்கீத் உள்ளிட்டவைகளுடன் கொண்டாடப்பட வேண்டும். நமது மோசமான முன்னோர்களால் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தீய பழக்கம் திருமணம். அது தொடர்ந்து சுழற்சியாக சோகத்தைக் கொடுத்து வருகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்களுக்கு வழக்கம் போல கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.