மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் தம்பி ராமையா மீது சரவணன் என்ற தயாரிப்பாளர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், 2015ம் ஆண்டில் நடிகர் உமா பதியை ராமையாவை வைத்து படம் தயாரிப்பதற்கு தம்பி ராமையாவை அணுகியிருந்தேன். அப்போது படத்தின் தயாரிப்பு பொறுப்பு அனைத்தையும் தான் மேற்கொள்வதாக நடிகர் தம்பிராமையா உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த படம் 5 வருடங்களாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் 2020ல்தான் முழுமை பெற்றது. ஆனபோதிலும் படம் இன்னும் வெளியாகவில்லை. காரணம் தம்பி ராமையாவும் படத்தின் நாயகனாக அவரது மகன் உமாபதியும் படம் வெளிவருவதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதன் காரணமாக தனக்கு இரண்டு கோடிகள் நஷ்டமானதாக தயாரிப்பாளர் சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதோடு படம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதே என்று தம்பி ராமையாவிடத்தில் கேட்டால், தன்னை மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார். இந்த புகாருக்கு தம்பி ராமையா தரப்பிலிருந்து எந்தமாதிரியான விளக்கம் வெளியாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.