பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சின்னத்திரை மூலம் புகழ்பெற்றவர் பிரஜின். அதன் பிறகு சினிமாவுக்கு சென்றார். தீ குளிக்கும் பச்சை மரம், மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை உள்பட சில படங்களில் நடித்தார். ஆனால் போதிய வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார்.
என்றாலும் இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி இருக்கிறார். நினைவெல்லாம் நீயடா, சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தை 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். குஹாசினி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா ,சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். ஜிஜு ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சீயோன் கூறியதாவது: இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை. அரசியல், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாட்டு நடப்பு, அரசியலைத் தோலுரித்துக் காட்டும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும். என்கிறார் இயக்குநர் சீயோன்.