300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சத்யராஜ் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் தீர்ப்புகள் விற்கப்படும். இந்த படத்தின் டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் இந்த படத்தின் விழாவில் முன்னாள் நீதிபதி சந்த்ருவும், போலீஸ் அதிகாரி திலகவதியும் கலந்து கொண்டு தலைப்பை ஆதரித்து பேசியது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்து சத்யராஜ் கூறியிருப்பதாவது: தீர்ப்புகள் விற்கப்படும் கதையை இயக்குனர் தீரன் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதே சமயம் படம் பற்றி மிகவும் கவலையாகவும் உணர்ந்தேன். இதன் திரைக்கதை நிச்சயமாக மிகுந்த ஆச்சரியமாக தந்தது. எனது கதாபாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. கதை கேட்டவுடனே உடனடியாக படப்பிடிப்பிற்கு செல்ல தோன்றியது.
ஆனால் இன்னொரு வகையில் தற்போதைய சமூகப் பிரச்சினையைக் நேரடியாக கையாளும் அழுத்தமான கருப்பொருளைக் இந்தப்படம் கொண்டிருப்பதும், படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கு தவிர்க்க முடியாத சுமையை உருவாக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. இருப்பினும், இயக்குனர் தீரன் மிக அழகாக இப்படத்தை கையாண்டு, இப்போது திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
நேர்மைமிக்க மற்றும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கு சரியாக செயல்பட்டால், ஒரு சாமானியன் சட்டத்தைக் கையில் எடுப்பது எப்போதும் அவசியமில்லை என்பதை, வலுவாக நியாயப்படுத்தும் சமூகத்திற்கு பொருத்தமான தலைப்பைக் கையாள்கிறது இந்தப் படம்.
அதே நேரத்தில், இந்த படம் வன்முறையைத் தூண்டாது. திரையரங்கில் படத்தை பார்த்த பிறகு, இந்த படத்தின் தலைப்பிற்கான மதிப்பை ரசிகர்கள் கண்டிப்பாக உணருவார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்து பார்வையாளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள், இந்தப் படம் பார்த்த பிறகு, ஆழமான தாக்கத்துடன் அவர்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவார்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியும். என்கிறார்.