போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ,ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனில் முக்கிய ரோலில் நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவரின் காட்சிகள் சில இன்னும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். ஏன் தாமதமென்று விசாரித்தால், இரண்டு நாட்கள் முழுமையாக நீருக்குள் படப்பிடிப்பு எடுக்க வேண்டியிருக்கிறதாம். இந்த படப்பிடிப்பிற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார்.
என்னவென்றால், இரண்டு நாட்கள் நீருக்குள் நடிக்க வேண்டியிருப்பதால், நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்க முடியாது. அதனால், நீரினை ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் பராமரிக்க வேண்டும். அதாவது, மிதமான சூட்டுடன் நீர் இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் நிபந்தனையைச் சாத்தியப்படுத்த வேண்டுமென்பதற்காகப் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகிறதாம். விரைவிலேயே, ஐஸ்வர்யா ராய் கேட்டபடியே படப்பிடிப்பும் நடக்கும் என்கிறார்கள்.