ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகாகாந்தி என்பவர், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த நவம்பர் 2-ந்தேதி அன்று இரவு நடிகர் விஜய்சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை சொல்லி பாராட்டினேன். ஆனால் அந்த வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய்சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவாக பேசினார். எனது சாதியை தவறாக பேசினார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது அவரது மேலாளர் ஜான்சன் என்னை தாக்கினார். அப்போது எனது காதில் அறைந்தார். இதனால் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தநாள், விஜய்சேதுபதியை நான் தாக்கியது போன்று அவர் தரப்பில் அவதூறு செய்தி பரப்பினார்கள்.
எனவே சினிமாத்துறையில் இருக்கும் ஒரு நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கியதோடு அவதூறு பரப்பிய குற்றத்திற்காக விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இந்த வாரமே நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.