அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகாகாந்தி என்பவர், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த நவம்பர் 2-ந்தேதி அன்று இரவு நடிகர் விஜய்சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை சொல்லி பாராட்டினேன். ஆனால் அந்த வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய்சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவாக பேசினார். எனது சாதியை தவறாக பேசினார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது அவரது மேலாளர் ஜான்சன் என்னை தாக்கினார். அப்போது எனது காதில் அறைந்தார். இதனால் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தநாள், விஜய்சேதுபதியை நான் தாக்கியது போன்று அவர் தரப்பில் அவதூறு செய்தி பரப்பினார்கள்.
எனவே சினிமாத்துறையில் இருக்கும் ஒரு நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கியதோடு அவதூறு பரப்பிய குற்றத்திற்காக விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இந்த வாரமே நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.