இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஒரே ஒரு வெற்றிக்காக தொடர்ந்து போராடி வரும் நடிகர்களில் ஒருவர் தமன் குமார். அவர் அறிமுகமான படித்துறை படம் வெளிவரவில்லை. அதன்பிறகு அச்சமின்றி, சட்டம் ஒரு இருட்டரை இரண்டாம் பாகம், சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேதுபூமி, 6 அத்தியாயம், நேத்ரா படங்களில் நடித்தார். எந்த படமும் அவரது கேரியருக்கு உதவவில்லை.
இதனால் சின்னத்திரை பக்கம் சென்றார். இப்போது வானத்தை போல தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பெரிய திரையில் தோன்றுகிறார். கண்மணி பாப்பா என்ற திகில் பேய் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்ரீமணி இயக்கி உள்ளார்.
ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தமன்குமாருடன் மியாஸ்ரீ, மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி தமன் கூறியதாவது: இயக்குனர் ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப் போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். மிகச்சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது. வழக்கமான பேய்படம் போன்று இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம் தான் பெஸ்ட். இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும். என்றார்.