சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” |

ஒரே ஒரு வெற்றிக்காக தொடர்ந்து போராடி வரும் நடிகர்களில் ஒருவர் தமன் குமார். அவர் அறிமுகமான படித்துறை படம் வெளிவரவில்லை. அதன்பிறகு அச்சமின்றி, சட்டம் ஒரு இருட்டரை இரண்டாம் பாகம், சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேதுபூமி, 6 அத்தியாயம், நேத்ரா படங்களில் நடித்தார். எந்த படமும் அவரது கேரியருக்கு உதவவில்லை.
இதனால் சின்னத்திரை பக்கம் சென்றார். இப்போது வானத்தை போல தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பெரிய திரையில் தோன்றுகிறார். கண்மணி பாப்பா என்ற திகில் பேய் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்ரீமணி இயக்கி உள்ளார்.
ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தமன்குமாருடன் மியாஸ்ரீ, மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி தமன் கூறியதாவது: இயக்குனர் ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப் போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். மிகச்சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது. வழக்கமான பேய்படம் போன்று இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம் தான் பெஸ்ட். இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும். என்றார்.