விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடுகிறார். இதுவரையில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடாத சமந்தா முதல் முறையாக இப்படத்தின் இயக்குனர் கேட்டுக் கொண்டதற்காக நடனமாடுகிறார். இதற்காக சமந்தாவிற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பாடலில சமந்தா கவர்ச்சியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பாடலின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் ஆரம்பமாகி உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், கணேஷ் ஆச்சார்யா நடன இயக்கத்தில் பாடல் படமாகி வருகிறதாம். இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது.