தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
விருத்தாசலம் : ஜெய்பீம் படத்தின் வசனத்தை வட்டார மொழியில் மாற்றிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன், பட நிறுவனம் அளித்த 50 ஆயிரம் ரூபாயை திருப்பி அனுப்பி உள்ளார்.
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய்பீம் படம் பல்வேறு விவாதங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன், மூன்று பக்க கடிதத்தை படத்தை தயாரித்த 2டி நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார்.
கடித விபரம் வருமாறு : படத்தின் கதை, கம்மாபுரம் காவல் நிலையத்தில் 90களில் நடந்த உண்மை சம்பவம். கதையின் களம் விருத்தாசலம் கம்மாபுரம் சார்ந்த பகுதி என்பதால் காட்சிகளில் வரும் உரையாடல், நடுநாட்டு வட்டார மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குனர் ஞானவேல் ஆகிய நீங்கள் சொன்னீர்கள். சமவெளி பழங்குடியினரான இருளர்களின் வாழ்வை சொல்லும் படமென்பதால் வட்டார வழக்கு மாற்றத்திற்கு சம்மதித்தேன்.
திடீரென எலி வேட்டை என்ற தலைப்பு பெயர் மாற்றம் பெற்று ஜெய்பீம் என நாளிதழ்களில் விளம்பரம் கண்டேன். வன்னியர்களின் அக்னி கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியும் அதிர்ச்சியை தந்தது. என்னிடம் கொடுத்த பிரதியில் வன்னியர் அக்னி கலசம் போன்ற காட்சி குறியீடுகள் எல்லாம் இல்லை. பல இடங்களில் ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தையே கொலையாளிகளாக சித்தரித்ததை தாங்கிக் கொள்ள இயலவில்லை.