மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் அருண் விஜய் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இவற்றில் பார்டர், அக்னிச்சிறகுகள், சினம், பாக்ஸர் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது தனது மைத்துனரும், இயக்குனருமான ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் நேற்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார் அருண் விஜய். பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 40 பேர் உடன் இணைந்து தானும் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்.
அருண் விஜய் கூறுகையில், ‛‛ரசிகர்கள் மேலும் ஒரு அரிய செயலை முன்னெடுத்துள்ளனர். ரத்த தானம் செய்ததோடு அல்லாமல், அவசர தேவையாக எப்போது இரத்தம் தேவைப்பட்டாலும் ரசிகர் மன்றம் மூலம், தேவைப்படுவோர்க்கு இரத்த தானம் அளிக்க முடிவு செய்துள்ளனர். ரசிர்களின் இந்த செயலுக்கும், அன்புக்கும் நன்றி'' என்றார்.