பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். தமன் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், அடுத்து குடும்ப சென்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளார். கதைப்படி விஜய் எல்லோரிடமும் அதீத அன்பு வைத்து விடுவாராம். இதனால் எழுகின்ற சிக்கல்கள் தான் கதை என்கிறார்கள். இதுவரை அதிகம் பேசாமல் அமைதியான கேரக்டர்களிலேயே நடித்து வந்த விஜய் இந்த படத்தில் கலகலவென பேசும் கேரக்டரில் நடிக்கிறாராம். விஜய் ஆரம்பகால படங்களில் கலகலப்பான கேரக்டர்களில் தான் நடித்து வந்தார்.